search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருமத்தம்பட்டி அருகே கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது
    X

    கருமத்தம்பட்டி அருகே கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது

    • ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
    • 3 பேரும் கஞ்சா விற்பதற்காக அங்கு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து 2.300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    கருமத்தம்பட்டி:

    கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள கிட்டாம்பாளையம் நால்ரோடு பகுதியில் கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை, சப் -இன்ஸ்பெக்டர் உதயசந்திரன் தலைமை யிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் அருகில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

    போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வாகராயம்பாளையத்தை சேர்ந்த தீபக்குமார்(20) சந்தோஷ்(24) மற்றும் சதீஷ்குமார் (32) என்பது தெரியவந்தது.

    இவர்கள் 3 பேரும் கஞ்சா விற்பதற்காக அங்கு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து 2.300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து அவர்கள் மீது கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்

    Next Story
    ×