என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனம் அருகே தொழிலாளி வீட்டில் 3 பவுன் நகை கொள்ளை
    X

    திண்டிவனம் அருகே தொழிலாளி வீட்டில் 3 பவுன் நகை கொள்ளை

    • பாபு கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
    • 3 பவுன் நகை திருடப்பட்டிருந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள கோனேரிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பாபு (வயது 40). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி குழந்தைகளுடன் வசித்து வந்தார். கடந்த 2 தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களிலும் அனல் காற்று வீசுகிறது. இதனால் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் வெளியில் படுத்து உறங்கினார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் பாபு கண் விழித்தார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் நகை திருடப்பட்டிருந்தது. இது தொடர்பாக பாபு அளித்த புகாரின் பேரில் ஓலக்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×