என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் வெவ்வேறு பகுதி சாலை விபத்துகளில்  3 பேர் பலி
    X

    கோவையில் வெவ்வேறு பகுதி சாலை விபத்துகளில் 3 பேர் பலி

    • சூலூர் சரகத்தில் மட்டும் 2 பேர் வாகனம் மோதி உயிரிழப்பு
    • மோட்டார் சைக்கிளில் சென்ற காளிமுத்து கார் மோதி சாவு

    கோவை,

    சூலூர் அருகே உள்ள பட்டணத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (60). சம்பவத்தன்று இவர் தனது மனைவியுடன் மொபட்டில் கொச்சி- சேலம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து ெமாபட் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்கள் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே சாமிநாதன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிங்காநல்லூரை சேர்ந்தவர் ஜெயராம் (24). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் சேலம்- கொச்சிரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ஜெயராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவில்பாளையம் அருகே உள்ள எஸ்.எஸ். குளத்தை சேர்ந்தவர் காளிமுத்து (41). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் துடியலூர்- கோவில்பாளையம் ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த காளிமுத்துவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் வரும் வழியிலேயே காளிமுத்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×