என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் வெவ்வேறு விபத்தில் 3 பேர் பலி
- லாரி கட்டுப்பாட்டை இழந்து லோடு வேன் மீது மோதியது.
- செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கோவை,
திண்டுக்கல் மாவட்டம் நாடகோட்டையை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 21). லோடு வேன் டிரைவர்.
சம்பவத்தன்று இவர் தனது லோடு வேனில் பல்லடம்- செட்டிப்பாளையம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து லோடு வேன் மீது மோதியது.
இதில் லோடு வேனை ஓட்டிச் சென்ற பிரகாஷ் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரகாஷ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளாங்குறிச்சி அருகே உள்ள ஸ்ரீமுருகன் நகரை சேர்ந்தவர் மயிலேஷ் (25). சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் காளப்பட்டி - விளாங்குறிச்சி ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மயிலேஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வடவள்ளி அருகே உள்ள பொம்மனாம்பாளையத்தை சேர்ந்தவர் தேவதாஸ் (53). சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் கல்வீரம்பாளையம் -அஜ்ஜனூர் ரோட்டில் சென்றார்.
அப்போது முன்னால் சென்ற லாரியின் பின் பக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்து மோதினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே தேவதாஸ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






