என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாளமுத்துநகரில்  1 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது
    X

    தாளமுத்துநகரில் 1 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது

    • லூர்தம்மாள்புரம் கல்லறை தோட்டம் பகுதியில் 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
    • போலீசார் சோதனை செய்தபோது அவர்களிடம் 1 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்து நகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் லூர்த ம்மாள்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்லறை தோட்டம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    உடனடியாக அவர்களை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் 1 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    உடனடியாக அதனை பறிமுதல் செய்த போலீசார் இருசக்கர வாகனத்தில் வந்த லூர்தம்மாள்புரம் நரேஷ் (வயது 30), தாளமுத்துநகர் ராஜீவ்காந்தி குடியிருப்பு இசக்கிமுத்து(40), விளாத்தி குளம் பணையூரைச் சேர்ந்த துரைமுருகன்(26) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×