search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்திய நாடார்கள் பேரமைப்பு சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்ற போது எடுத்தபடம்.
    X
    இந்திய நாடார்கள் பேரமைப்பு சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்ற போது எடுத்தபடம்.

    கொட்டாகுளத்தில் இந்திய நாடார்கள் பேரமைப்பு சார்பில் உறுப்பினர் சேர்க்கை

    தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தில் இந்திய நாடார்கள் பேரமைப்பு சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
    சாம்பவர் வடகரை:

    இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிறுவன தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன் நாடார் ஆலோசனையின் பேரில் தென்காசி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கொட்டா குளத்தில் மாவட்ட தலைவர் சூரியபிரகாஷ் தலைமையில், மாவட்ட துணைத்தலைவர் கொட்டாகுளம் கணேசன், மாவட்ட செயலாளர் முருகன், தென்காசி நகர தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் கொட்டாகுளம் நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட தேவி ஸ்ரீ சிற்றாற்று வீரியம்மன் கோவிலில் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் அகரக்கட்டு நாடார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் கணேசன் நாடார், சங்கரலிங்க நாடார், சுப்பிரமணிய நாடார், நல்லமுத்து ராசையா நாடார், சுவாமிதாஸ் நாடார், அருணாச்சலம் நாடார், பழனிச்சாமி நாடார், இசக்கி நாடார், துரைராஜ் நாடார், முத்தையா சாமி நாடார், காளிதாஸ் நாடார், முருகையா நாடார் மற்றும் இந்திய நாடார்கள் பேரமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×