search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ப.சிதம்பரம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
    X
    ப.சிதம்பரம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    மேல்சபை எம்.பி. தேர்தல்- ப.சிதம்பரம் வேட்புமனு தாக்கல்

    எங்களுக்கு ஆதரவு தருகின்ற தி.மு.க. அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமை கட்சியினருக்கு என் இதயம் நிறைந்த நன்றி என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
    சென்னை:

    மேல்சபை எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரம் நேற்று மாலை அறிவிக்கப்பட்டார்.

    முன்னதாகவே மனு தாக்கலுக்கான ஏற்பாடுகளை செய்யும்படி கட்சி மேலிடம் அவரிடம் சொல்லி உள்ளது. எனவே ப.சிதம்பரம் அதற்கான பணிகளில் ஈடுபட்டார். சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை உள்பட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தினார்.

    தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்த சோனியாவுக்கு எனது உளமார்ந்த நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதே போல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    எங்களுக்கு ஆதரவு தருகின்ற தி.மு.க. அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமை கட்சியினருக்கு என் இதயம் நிறைந்த நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

    இன்று பகல் 12 மணியளவில் தலைமை செயலகத்தில் சட்டசபை செயலாளரிடம் ப.சிதம்பரம் மனுதாக்கல் செய்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வேட்பாளர் பெயரை முன்மொழிந்து கையெழுத்து போட்டனர். மற்ற எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.

    முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ப.சிதம்பரம் வாழ்த்து பெற்றார்.

    Next Story
    ×