என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சென்னை திருவான்மியூர் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து
Byமாலை மலர்27 May 2022 6:50 PM GMT (Updated: 27 May 2022 6:50 PM GMT)
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடினர்.
சென்னை:
சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில், நேற்றிரவு எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீயை அணைக்கும் பணியில் திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த 4-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
அடுக்கு மாடி கட்டிடத்தில் தீ வேகமாக பரவியதால், 2 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
முன்னதாக அந்த கட்டிடத்தின் உள்ளே இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக அந்த பகுதி புகை மூட்டமாக காட்சி அளித்தது.
தீ விபத்திற்கான காரணம் உடனடியாக வெளியாகவில்லை. இந்த தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்...
அரசு நிலங்களை அபகரிக்க உதவும் புதிய உத்தரவை திரும்ப பெற வேண்டும்- சீமான்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X