என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பா.ஜ.க. பக்கம் திரும்புகிறதா தி.மு.க.?- மாறும் அரசியல் சூழ்நிலையால் பரபரப்பு
Byமாலை மலர்20 May 2022 9:59 AM GMT (Updated: 20 May 2022 12:19 PM GMT)
வருகிற 28-ந்தேதி கருணாநிதி சிலையை திறக்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அழைக்கப்பட்டுள்ளார்.
சென்னை:
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தி.மு.க. மீது காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியால் அந்த கட்சியை கை கழுவிவிட்டு பா.ஜனதா பக்கம் திரும்புவதற்கு தி.மு.க. தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தல் வருகிற ஜூலை மாதம் நடக்க உள்ளது. தற்போதைய நிலையில் பா.ஜனதாவுக்கு 9,194 வாக்குகள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் சில மாநில கட்சிகளின் ஆதரவை பெற பா.ஜனதா முயற்சித்து வருகிறது.
இந்த சூழலில்தான் வருகிற 28-ந்தேதி கருணாநிதி சிலையை திறக்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அழைக்கப்பட்டுள்ளார். அவரும் ஒத்துக்கொண்டு உள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் மிகுந்த பிடிப்பு கொண்ட அவரை கருணாநிதி சிலை திறப்புக்கு அழைத்ததும் அதை அவர் ஏற்றுக் கொண்டதும் தி.மு.க.- பா.ஜனதா இடையேயான நெருக்கத்தை காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தி.மு.க. மீது காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியால் அந்த கட்சியை கை கழுவிவிட்டு பா.ஜனதா பக்கம் திரும்புவதற்கு தி.மு.க. தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தல் வருகிற ஜூலை மாதம் நடக்க உள்ளது. தற்போதைய நிலையில் பா.ஜனதாவுக்கு 9,194 வாக்குகள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் சில மாநில கட்சிகளின் ஆதரவை பெற பா.ஜனதா முயற்சித்து வருகிறது.
இந்த சூழலில்தான் வருகிற 28-ந்தேதி கருணாநிதி சிலையை திறக்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அழைக்கப்பட்டுள்ளார். அவரும் ஒத்துக்கொண்டு உள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் மிகுந்த பிடிப்பு கொண்ட அவரை கருணாநிதி சிலை திறப்புக்கு அழைத்ததும் அதை அவர் ஏற்றுக் கொண்டதும் தி.மு.க.- பா.ஜனதா இடையேயான நெருக்கத்தை காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
தற்போது வெங்கையா நாயுடு ஊட்டியில் ஓய்வு எடுத்து வருகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் மலர் கண்காட்சியை திறந்து வைப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக ஊட்டி சென்றுள்ளார். இருவரும் சந்தித்து பேசவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மாறி வரும் இந்த அரசியல் சூழ்நிலையால் பா.ஜனதா பக்கம் தி.மு.க. செல்லவும் வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது.
இதையும் படியுங்கள்...தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தாமதமாகிறது
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X