search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை படத்தில் காணலாம்.
    X
    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை படத்தில் காணலாம்.

    நெல்லையில் பா.ஜ.க. கண்டன ஆர்ப்பாட்டம்

    நெல்லை அருகே குவாரி விபத்தில் உயிரிழந்தவர்ளுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நெல்லை:

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு பா.ஜனதா சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அமைப்புசாரா பிரிவு மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் நெல்லை அடைமிதிப்பான்குளம் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், மாவட்டத்தில் சட்டத்திற்குபுறம்பாக செயல்படும் குவாரிகளை மூடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
     
    ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மகாராஜன், ஆறுமுகம், முத்துபலவேசம், கணேசமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×