என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 60 ஆண்டு சிறைத்தண்டனை - திருப்பூர் மகளிர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
Byமாலை மலர்13 May 2022 10:47 AM GMT (Updated: 13 May 2022 10:47 AM GMT)
கடந்த ஆண்டு மார்ச் 10-ந்தேதி உறவினரின் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றபோது அங்கு இருந்த 2 சிறுமிகள்(சகோதரிகள்) மற்றும் மற்றொரு சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார்.
திருப்பூர்:
திருப்பூர் பழவஞ்சிபாளையத்தை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 46). கூலித் தொழிலாளி. கடந்த ஆண்டு மார்ச் 10-ந்தேதி உறவினரின் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றபோது அங்கு இருந்த 2 சிறுமிகள்(சகோதரிகள்) மற்றும் மற்றொரு சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார்.
இது தொடர்பாக சிறுமிகளின் பெற்றோர், திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து கதிரேசனை கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.நாகராஜன் தீர்ப்பளித்தார். அதில் 3 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த கதிரேசனுக்கு 60 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும் ரூ. 12 ஆயிரம் அபராதம் விதித்தார். இதையடுத்து கதிரேசன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பி. ஜமிலாபானு ஆஜரானார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X