search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    காளிப்பட்டி வீரகாரன் சாமி, புடவைக்காரி அம்மன் பெரியதெவப்பூஜை விழா

    காளிப்பட்டி வீரகாரன் சாமி, புடவைக்காரி அம்மன் பெரியதெவப்பூஜை விழா நடந்தது.
    ஆட்டையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள காளிப்பட்டியில் வன்னிய  சமுதாயத்திற்கு பாத்தியப்பட்டஸ்ரீ வீரகாரன் சுவாமி புடவைக்காரி அம்மன் பெரியதெவப்பூஜை வருகிற 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. 

    இதையொட்டி 16-ந்தேதி இரவு 9 மணிக்கு முத்தனம் பாளையம் கோவில் வீட்டிலிருந்து பூஜை கூடை புறப்பட்டு காளிப்பட்டி வீரகாரன் புடவைக்காரி அம்மன் கோவிலை அடைகிறது. அங்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்துகின்றனர்.

     இதைத் தொடர்ந்து 17 -ந் தேதி 4:30 மணிக்கு சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெறும். தொடர்ந்து காலை 10 மணிக்கு புடவைக்காரி அம்மனுக்கு பொங்கலிட்டு சிறப்பு பூஜை நடைபெறும் விழாவுக்கான ஏற்பாடுகளை காளிப்பட்டி நீராகாரம் புடவைக்காரி அம்மன் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×