என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இலவச மனை பட்டா வேண்டி திரண்டு வந்த பொதுமக்கள்
    X
    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இலவச மனை பட்டா வேண்டி திரண்டு வந்த பொதுமக்கள்

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இலவச மனை பட்டா வேண்டி திரண்டு வந்த பொதுமக்கள்

    இலவச பட்டா வேண்டி 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு வந்தனர். பின்னர் கோரிக்கை மனு அளித்தனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே கோதண்ட ராமாபுரம் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு வந்தனர். பின்னர் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

    கடலூர் மாவட்டம் கோதண்டராமாபுரம் உப்ப கேணி காலனியில் நீர்நிலை புறம்போக்கு நிலத்தை சார்ந்து 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். மேலும் நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்து வருவதோடு, எங்களுக்கு சொத்து எதுவும் இல்லை. ஆகையால் நாங்கள் 50 ஆண்டுகளாக வசித்து வரும் இடத்தில் மனைபட்டா வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×