search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசினார்.  அருகில் மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி, நகர செயலாளர் சரவணன் உள்ளிட்ட
    X
    கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசினார். அருகில் மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி, நகர செயலாளர் சரவணன் உள்ளிட்ட

    மே தின பொதுக்கூட்டம்

    காரைக்குடியில் அ.ம.மு.க. சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடந்தது.
    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மே தின பொதுக்கூட்டம் பாண்டியன் தியேட்டர் திடலில் நடந்தது. 

    சிவகங்கை மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி தலைமை தாங்கினார்.  தொழிற்சங்க பேரவை மாவட்ட செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார்.கண்ணங்குடி ஒன்றிய தலைவர் சரவண மெய்யப்பன் வரவேற்றார்.

    இதில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    சாமானியர்களால் ஆரம்பிக்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்.உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களின் அடிப்படை கோரிக்கையான 8 மணிநேர வேலையை போராடி பெற்றது. உழைப்பாளர் வர்க்கம். போராடினால் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் தினமே மேதினம்.துரோகத்தை எதிர்த்து, அச்சுறுத்தலை எதிர்த்து ஆரம்பித்த இயக்கம்.எந்த எதிர்பார்ப்புமின்றி பணபலம், அதிகாரபலத்தை எதிர்த்து  போராடிக் கொண்டிருப்பவர்கள் நாங்கள். 

    அம்மாவின் உண்மையான தொண்டர்கள் நாங்கள்தான். மீண்டும் அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவோம்.

    திருந்தியிருப்பார்கள் என்று நினைத்து மக்கள் தி.மு.க.விற்கு வாக்களித்துள்ளார்கள்.போக்குவ ரத்து தொழிலாளர்களின் ஊதிய கோரிக்கை, நிலுவை பஞ்சப்படி, பென்சன், அகவிலைப்படி நிறுத்திவைப்பு போன்ற வற்றை எப்போது நிறைவேற்றுவீர்கள்? 

    வாரிசு பணிநியமனம் எப்போது? விருப்பஒய்வு, பணியின்போது இறப்பு பலன்களை எப்போது வழங்குவீர்கள்? மின்சார வாரியத்தில் ஊதிய உயர்வை நிலுவை தொகையோடு எப்போது வழங்குவீர்கள்?
    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறிதிகளை நிறைவேற்றுவது எப்போது? தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது.குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பில்லை.இந்த கூட்டத்திற்கு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த நிர்வாகிகளை பாராட்டுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    அ.தி.மு.க. மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளராக பதவி வகித்து ராஜினாமா செய்த வெங்களூர் வீரப்பன்  டி.டி.வி. தினகரன் முன்னைலை யில் அ.ம.மு.க.வில் இணைந்தார். இதில் மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் இறகு சேரி முருகன், வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் அன்பரசன், எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் வெங்கடேஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர் பழனி பெரியசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் விமல், பேரவை மாவட்ட தலைவர் ஊரவயல் ராமு, மாவட்ட பேரவை செயலாளர் ராஜேந்திரன், தேவ கோட்டை நகர செயலாளர் கமலக்கண்ணன், சாக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் கார்த்தி கேயன், நிர்வாகி மரிங்கிப்பட்டி ரமேஷ், மங்களம் பூமி, பந்தா பாண்டி உள்பட நகர, ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள், மகளிரணியினர், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.காரைக்குடி நகர செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.
    Next Story
    ×