என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரிஷிவந்தியத்தை தாலுகாவாக அறிவிக்க கோரி பொதுமக்கள் போராட்டம்- 24 பேர் கைது
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ரிஷிவந்தியம் காமராஜர் தெருவில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் ரிஷிவந்தியம் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பாபு, பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், அன்பழகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் போலீசாரின் சமாதானத்தை ஏற்கவில்லை. அப்போது சிலர் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதன் மூலம் 3 பெண்கள் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் கோவில் வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை கிராம மக்கள் தொடர்ந்து நடத்தினர். இவர்களிடம் மாலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி நடத்திய பேச்சுவார்த் தையின் பேரில் கலைந்து சென்றனர். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மால யில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்