என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விஷம் குடித்து முதியவர் தற்கொலை
Byமாலை மலர்16 April 2022 10:45 AM GMT (Updated: 16 April 2022 10:45 AM GMT)
திருமூர்த்தியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் ஊராட்சி காமராஜர் காலனி பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி, (வயது 80) .இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்டதால், தனியே வசித்து வந்தார். இவரது மகன் கந்தசாமி அருகே வசித்து வந்தார்.
இந்தநிலையில் முதுமை காரணமாக அடிக்கடி திருமூர்த்திக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் மனம் வருந்திய நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை அவருக்கு உணவு கொடுக்க மகன் கந்தசாமி சென்றபோது வீட்டு வாசலில் வாயில் நுரை தள்ளிய நிலையில் திருமூர்த்தி கிடந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மகன் அக்கம்பக்கம் உள்ளவர்கள் உதவியோடு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு திருமூர்த்தியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் அவர் விஷம் குடித்து இருப்பதாகவும் தெரிவித்தனர். இந்த தற்கொலை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X