என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தமிழகத்தில் இந்தியை நுழைய விடமாட்டோம்- ஜெயக்குமார் பேட்டி
Byமாலை மலர்11 April 2022 8:11 AM GMT (Updated: 11 April 2022 8:11 AM GMT)
தி.மு.க ஆட்சியில் பேசப்படும் திராவிட மாடல் மக்களை ஏமாற்றும் செயலாகும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
சென்னை:
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சொத்து வழக்கில் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
‘தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கைக்கு மட்டுமே இடம் உண்டு. மும்மொழிக் கொள்கைக்கு இடம் இல்லை. உலகத்தின் முன்னோடி மொழியாக தமிழ் இருக்க தமிழகத்தில் இந்தி மொழியை எந்தவிதத்திலும் நுழைய விடமாட்டோம். தமிழ் மொழி அனைத்து மொழிகளையும் விட மூத்த மொழி. எனவேதான் பிரதமர் மோடியே தமிழ் மொழியின் பெருமைகளை சுட்டிக்காட்டி வருகிறார்.
ஏ.ஆர்.ரகுமான் கூறியது போல தமிழே இணைப்பு மொழியாக இருக்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில் பேசப்படும் திராவிட மாடல் மக்களை ஏமாற்றும் செயலாகும். உள்ளாட்சி பிரதிநிதிகளின் தவறான நடவடிக்கையால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் வெளிப்படை தன்மையுடன் இருந்த டெண்டர் முறை இப்போது இல்லை. கரூரில் போடாத சாலைகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.’
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சொத்து வழக்கில் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
‘தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கைக்கு மட்டுமே இடம் உண்டு. மும்மொழிக் கொள்கைக்கு இடம் இல்லை. உலகத்தின் முன்னோடி மொழியாக தமிழ் இருக்க தமிழகத்தில் இந்தி மொழியை எந்தவிதத்திலும் நுழைய விடமாட்டோம். தமிழ் மொழி அனைத்து மொழிகளையும் விட மூத்த மொழி. எனவேதான் பிரதமர் மோடியே தமிழ் மொழியின் பெருமைகளை சுட்டிக்காட்டி வருகிறார்.
ஏ.ஆர்.ரகுமான் கூறியது போல தமிழே இணைப்பு மொழியாக இருக்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில் பேசப்படும் திராவிட மாடல் மக்களை ஏமாற்றும் செயலாகும். உள்ளாட்சி பிரதிநிதிகளின் தவறான நடவடிக்கையால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் வெளிப்படை தன்மையுடன் இருந்த டெண்டர் முறை இப்போது இல்லை. கரூரில் போடாத சாலைகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.’
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...தென்மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை- வானிலை ஆய்வு மையம் தகவல்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X