என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
முன்னாள் சபாநாயகர் தனபால் ஆஸ்பத்திரியில் அனுமதி- நலம் விசாரித்த முதலமைச்சர்
Byமாலை மலர்11 April 2022 7:26 AM GMT (Updated: 11 April 2022 8:57 AM GMT)
சட்டசபை நிகழ்வில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் சபாநாயகர் தனபாலுடன் போனில் தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்தார்.
சென்னை:
அ.தி.மு.க. அமைச்சரவையில் சபாநாயகராக இருந்தவர் தனபால். கடந்த சட்டசபை தேர்தலில் அவினாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
கடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டி பேசினார்.
இந்த நிலையில் தற்போது சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் தனபால் பங்கேற்று வருகிறார். 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று சட்டசபை கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தபோது அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவர்கள் தனபால் உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள்.
முன்னாள் சபாநாயகர் தனபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டது. சட்டசபை நிகழ்வில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் அங்கிருந்து தனபாலுடன் போனில் தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்தார்.
அவரது உடல்நலம் நன்றாக இருப்பதாகவும் சாதாரண பரிசோதனை மட்டும் மேற்கொண்டதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்தன.
அ.தி.மு.க. அமைச்சரவையில் சபாநாயகராக இருந்தவர் தனபால். கடந்த சட்டசபை தேர்தலில் அவினாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
கடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டி பேசினார்.
இந்த நிலையில் தற்போது சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் தனபால் பங்கேற்று வருகிறார். 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று சட்டசபை கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தபோது அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவர்கள் தனபால் உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள்.
முன்னாள் சபாநாயகர் தனபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டது. சட்டசபை நிகழ்வில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் அங்கிருந்து தனபாலுடன் போனில் தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்தார்.
அவரது உடல்நலம் நன்றாக இருப்பதாகவும் சாதாரண பரிசோதனை மட்டும் மேற்கொண்டதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையும் படியுங்கள்...பல அடுக்கு வாகன நிறுத்தம் காஞ்சிபுரத்தில் அமைக்கப்படும்- கே.என்.நேரு பதில்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X