என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பல அடுக்கு வாகன நிறுத்தம் காஞ்சிபுரத்தில் அமைக்கப்படும்- கே.என்.நேரு பதில்
Byமாலை மலர்11 April 2022 7:16 AM GMT (Updated: 11 April 2022 8:54 AM GMT)
சென்னை தி.நகரில் கட்டப்பட்ட அடுக்குமாடி வாகன நிறுத்தம் போல் இல்லாமல், இனி கட்டப்படும் அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள் இரும்பு பீம் கொண்டு எளிய செலவில் கட்டப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சென்னை:
சட்டசபையில் கேள்வி நேரத்தில், எம்.எல்.ஏ.க்கள் ஐட்ரீம்ஸ் மூர்த்தி, எழிலரசன், பிச்சாண்டி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ராயபுரம் எம்.சி.சாலை குறுகலாக உள்ளதால், அதற்கு அருகே உள்ள ராபின்சன் பூங்கா அருகே அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என்றும், வளர்ந்து வரும் தொழில் வளர்ச்சிக்கேற்ப, தமிழ்நாடு முழுவதுமே பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படுவது அவசியமான ஒன்றாக உள்ளதாகவும், தேவைப்படும் இடங்களில் பன்னடுக்கு வாகன நிறுத்தங்கள் அமைக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும் திருவண்ணாமலை கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நகராட்சித்துறையின் இடம் ஏதும் இருப்பின் அங்கு அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என்றும், காஞ்சிபுரத்திலும் இடம் கிடைப்பதைப் பொறுத்து பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என்றும், சென்னையின் தி.நகரில் அமைக்கப்பட்டது போல் இல்லாமல், இனி இரும்பு பீம் கொண்டு குறைந்த செலவில் பன்னடுக்கு வாகன நிறுத்தங்கள் கட்டப்படும் என்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில், எம்.எல்.ஏ.க்கள் ஐட்ரீம்ஸ் மூர்த்தி, எழிலரசன், பிச்சாண்டி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ராயபுரம் எம்.சி.சாலை குறுகலாக உள்ளதால், அதற்கு அருகே உள்ள ராபின்சன் பூங்கா அருகே அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என்றும், வளர்ந்து வரும் தொழில் வளர்ச்சிக்கேற்ப, தமிழ்நாடு முழுவதுமே பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படுவது அவசியமான ஒன்றாக உள்ளதாகவும், தேவைப்படும் இடங்களில் பன்னடுக்கு வாகன நிறுத்தங்கள் அமைக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும் திருவண்ணாமலை கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நகராட்சித்துறையின் இடம் ஏதும் இருப்பின் அங்கு அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என்றும், காஞ்சிபுரத்திலும் இடம் கிடைப்பதைப் பொறுத்து பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என்றும், சென்னையின் தி.நகரில் அமைக்கப்பட்டது போல் இல்லாமல், இனி இரும்பு பீம் கொண்டு குறைந்த செலவில் பன்னடுக்கு வாகன நிறுத்தங்கள் கட்டப்படும் என்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்...ஜோதிராவ் புலே பிறந்த நாள்- மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X