என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரி
    X
    நீலகிரி

    நீலகிரியில் வார இறுதி நாட்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    நீலகிரியில் உள்ள சுற்றுலா தளங்களை 2 நாட்களில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர்.
    நீலகிரி:

    தமிழகத்தில் கோடைக்காலம் துவங்கியுள்ளதால், பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. தென் மாவட்டங்களில் கடந்த ஓரிரு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஊட்டி உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

    அதிலும் குறிப்பாக வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு ஆகிய 2 தினங்களில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர். தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான தாவிரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட 7 சுற்றுலா தளங்களை 36 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். அதே போல் சுற்றுலாத்துறை சொந்தமான சுற்றுலா தளங்களை சுமார் 25 ஆயிரம் பேர் கண்டு ரசித்துள்ளனர்.

    Next Story
    ×