என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருமணமான 25 நாளில் கடிதம் எழுதி வைத்துவிட்டு புதுப்பெண் மாயம்
Byமாலை மலர்8 April 2022 6:22 AM GMT (Updated: 8 April 2022 6:22 AM GMT)
சிவகிரியில் திருமணமான 25 நாளில் கடிதம் எழுதி வைத்துவிட்டு புதுப்பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகிரி:
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ராயகிரியை சேர்ந்தவர் மதுரை செல்வம்(வயது 30). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அருணாச்சலம் என்பவரது மகள் அருணாதேவி (20) என்பவருக்கும் கடந்த மாதம் 13-ந்தேதி திருமணமாகி உள்ளது.
இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த அருணாதேவியை திடீரென காணவில்லை. அக்கம் பக்கத்து வீடுகளில் மதுரை செல்வம் தேடிப் பார்த்துள்ளார். ஆனால் அங்கும் அவர் இல்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சிவகிரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதுதொடர்பாக போலீசார், அருணாதேவியின் அறையில் சென்று பார்த்தனர். அங்கு அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று இருந்தது.
அதில், ‘எனது தந்தையின் மகிழ்ச்சிக்காக நான் திருமணம் செய்து கொண்டேன். எனக்கு வாழ பிடிக்கவில்லை. சுதந்திரமான வாழ்க்கையை நோக்கி செல்கிறேன். என்னை யாரும் தேட வேண்டாம்‘ என்று எழுதியிருந்தார்.
இதனால் திருமணம் பிடிக்காமல் அவர் வீட்டை விட்டு வெளியே சென்றது தெரியவந்தது. அவர் எங்கு சென்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ராயகிரியை சேர்ந்தவர் மதுரை செல்வம்(வயது 30). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அருணாச்சலம் என்பவரது மகள் அருணாதேவி (20) என்பவருக்கும் கடந்த மாதம் 13-ந்தேதி திருமணமாகி உள்ளது.
இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த அருணாதேவியை திடீரென காணவில்லை. அக்கம் பக்கத்து வீடுகளில் மதுரை செல்வம் தேடிப் பார்த்துள்ளார். ஆனால் அங்கும் அவர் இல்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சிவகிரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதுதொடர்பாக போலீசார், அருணாதேவியின் அறையில் சென்று பார்த்தனர். அங்கு அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று இருந்தது.
அதில், ‘எனது தந்தையின் மகிழ்ச்சிக்காக நான் திருமணம் செய்து கொண்டேன். எனக்கு வாழ பிடிக்கவில்லை. சுதந்திரமான வாழ்க்கையை நோக்கி செல்கிறேன். என்னை யாரும் தேட வேண்டாம்‘ என்று எழுதியிருந்தார்.
இதனால் திருமணம் பிடிக்காமல் அவர் வீட்டை விட்டு வெளியே சென்றது தெரியவந்தது. அவர் எங்கு சென்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X