என் மலர்
உள்ளூர் செய்திகள்

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி
தேர்வு குறித்து வதந்திகளை நம்ப வேண்டாம்- அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி
நீட் தேர்வு விவகாரத்தில் சட்டப்போராட்டம் செய்து விலக்கு பெறுவதற்கு எல்லா முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பி.மாத்தூரில் நடைபெறும் தி.மு.க. நிர்வாகியின் இல்லத்திருமண விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு புதுக்கோட்டை தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இச்சடி என்ற இடத்தில் தி.மு.க.வினர் வரவேற்பு கொடுத்தனர்.
அப்போது நிருபர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு உட்பட ஒன்பதாம் வகுப்பு வரையில் இந்த ஆண்டு இறுதித் தேர்வு நிச்சயம் நடைபெறும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தேர்வு குறித்து இன்று மாலை அறிவிப்புகள் வெளியாகும்.
இந்த ஆண்டு குறைந்த கால கட்டமே மாணவர்கள் பள்ளிக்கு வரும் சூழ்நிலை இருந்ததால் பாடத்திட்டம் ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் தேர்வு நடத்த உள்ளோம். முதலமைச்சரின் டெல்லி பயணம் வெற்றி அடைந்துள்ளது.
நீட் தேர்வு விவகாரத்தில் சட்டப்போராட்டம் செய்து விலக்கு பெறுவதற்கு எல்லா முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜூலை 17 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது முன்னிட்டு அதற்கான எல்லா ஹைடெக் பயிற்சிகளையும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






