என் மலர்
உள்ளூர் செய்திகள்

பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்பு: வேளாங்கண்ணி லாட்ஜில் சென்னையை சேர்ந்த 4 வாலிபர்கள் கைது
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் நாகூர் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் வேளாங்கண்ணி பகுதிகளில் அதிகாலை ஆய்வுக்கு சென்றனர். அப்போது அங்குள்ள தனியார் லாட்ஜ்களில் திடீர் சோதனை நடத்தினர்.
இதில் ஒரு தனியார் லாட்ஜில் ஒரே அறையில் 4 வாலிபர்கள் தங்கியிருந்தது தெரியவந்தது. சங்தேகத்தின் பேரில் அவர்களிடம் போலீசார் விசாரணை செய்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர்.
இதையடுத்து 4 பேரையும் போலீசார் நாகூர் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று மேலும் விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் 4 பேரும் சென்னையை சேர்ந்த எழிலரசன்(வயது29), திவாகரன்(28), விக்னேஷ்(20), தேவசகாயம்(35) என்பதும், இவர்கள் மீது சென்னையை சுற்றியுள்ள பல்வேறு போலீஸ் ஸ்டேசன்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
மேலும் கொலை முயற்சி வழக்கில் 4 பேர் தலைமறைவாகி வேளாங்கண்ணி வந்து தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து நாகூர் போலீசார் பிடிபட்ட 4 வாலிபர்கள் குறித்த தகவல்களை சென்னை போலீசாருக்கு தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்களிடம் நாகூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் எதற்காக இங்கு வந்து 4 பேரும் தங்கினர். அறையில் தங்கி இருந்து ஏதாவது கொலைக்கான சதி திட்டம் தீட்டினரா என்பது விசாரணைக்குப் பின்னரே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.






