என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தமிழகத்தில் இன்று 33 பேருக்கு கொரோனா- சிகிச்சை பெறுவோர் 366 ஆக குறைந்தது
Byமாலை மலர்28 March 2022 3:06 PM GMT (Updated: 28 March 2022 3:06 PM GMT)
தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 394-ல் இருந்து 366 ஆக குறைந்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக தினசரி பாதிப்பு 50க்கும் குறைவாகவே உள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துவிட்டது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம் தொடர்பாக சுகாதாரத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 34 லட்சத்து 52 ஆயிரத்து 714 ஆக உள்ளது. புதிதாக உயிரிழப்பு பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38025 ஆக நீடிக்கிறது.
இன்று 61 பேர் சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். எனவே, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 14 ஆயிரத்து 323 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 394-ல் இருந்து 366 ஆக குறைந்துள்ளது.
தலைநகர் சென்னையைப் பொருத்தவரை புதிதாக 16 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களில் ஓரிரு பாதிப்புகளே உள்ளன. மற்ற மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக தினசரி பாதிப்பு 50க்கும் குறைவாகவே உள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துவிட்டது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம் தொடர்பாக சுகாதாரத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 34 லட்சத்து 52 ஆயிரத்து 714 ஆக உள்ளது. புதிதாக உயிரிழப்பு பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38025 ஆக நீடிக்கிறது.
இன்று 61 பேர் சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். எனவே, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 14 ஆயிரத்து 323 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 394-ல் இருந்து 366 ஆக குறைந்துள்ளது.
தலைநகர் சென்னையைப் பொருத்தவரை புதிதாக 16 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களில் ஓரிரு பாதிப்புகளே உள்ளன. மற்ற மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X