என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    லாட்டரி டிக்கெட்டுகள் விற்ற 2 பேர் கைது

    சிதம்பரம் அருகே லாட்டரி டிக்கெட் விற்றதாக கந்தன், காமராஜர் நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் பகுதியில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை அமோகமாக நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சிதம்பரம் டவுன் போலீசார் சிதம்பரம் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அப்பாவு சந்து பகுதியில் சென்றபோது 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். உஷாரான போலீசார் அவர்களை மடக்கி பிடித்து சோதனை போட்டனர். சோதனையில் அவர்களிடம் லாட்டரி டிக்கெட்டுகள் இருந்தது. லாட்டரி டிக்கெட் விற்றதாக கந்தன், காமராஜர் நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×