search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    ஆத்தூர் அருகே கார் மோதி தொழிலாளி பலி

    ஆத்தூர் அருகே புத்திரகவுண்டன்பாளையத்தில் கார் மோதி தொழிலாளி பலியானார்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 48). சலவைத்தொழிலாளி. இவர் பேளூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். 

    சென்னை-சேலம் சாலையில் புத்திரகவுண்டன்பாளையம் பிரிவு ரோட்டை கடக்க முயன்றார். அப்போது ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக ராஜா சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

     இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக ஏத்தாப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    Next Story
    ×