என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்குடி
    X
    காரைக்குடி

    காரைக்குடியை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை

    காரைக்குடியை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு வழங்க 35 பொதுநலச்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
    காரைக்குடி

    காரைக்குடியை புதிய மாவட்டமாக அமைத்து தமிழக அரசு அறிவிக்க வேண்டுமென முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்க 35பொதுநலச்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

    காரைக்குடி, தொழில் வணிகக்கழகம், ரோட்டரி சங்கம், லயன்ஸ் கிளப், ஒய்ஸ் மென் கிளப், முன்னாள் ராணுவத்தினர் சங்கம், அச்சகப் பணியாளர் கள், ரெடிமேட் வணிகர் கள், சிவில் இஞ்சினியர்ஸ் அசோசியேசன், ஜவுளி வணிகர்கள், தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள், மருந்து வணிகர்கள் சங்கம் உட்பட 35பொதுநல சங்கங்களின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. 

    இந்த கூட்டத்தில் காரைக்குடி வளர்ச்சி குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது குறித்து தொழில் வணிக கழகதலைவர் சாமி. திராவிடமணி செயலாளர் கண்ணப்பன் கூறியதாவது:-

    தனியாக புதிய மாவட்டம் அமைத்திட அனைத்து தகுதியும் அரசு விதிகளுக்குரிய தன்மையும் காரைக்குடி பகுதியில் இருக்கிறது.கடந்த 1985ம் ஆண்டில் இருந்து புதிய மாவட்டமாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டு வருகின்றனர்.

    மாவட்ட தலைநகருக்கான அரசின் பல்வேறு நலத் திட்டஙகள் கிடைக்காமல் உள்ளது. எனவே இந்த கோரிக்கைகளை முதலமைச்சரிடம் நேரில் சென்று வழங்க தீர்மானிக் கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×