என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உடுமலை வீரமாத்தியம்மன் கோவில் விழாவில் நெல் குத்தும் நிகழ்ச்சி
Byமாலை மலர்8 March 2022 7:45 AM GMT (Updated: 8 March 2022 7:45 AM GMT)
நடப்பாண்டு திருவிழா கடந்த 28-ந்தேதி அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் பக்தர்களுக்கு சுத்தி செய்தல் மற்றும் பொதுப்பொங்கலுக்கு, நெல் குத்தும் நிகழ்ச்சி நடந்தது.
உடுமலை:
உடுமலை வல்லக்குண்டாபுரத்தில் வீரமாத்தியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பொதுப்பொங்கலுக்கு நெல் குத்தும் நிகழ்ச்சி நடந்தது. உடுமலை ஒன்றியம், கொடிங்கியம் ஊராட்சி வல்லக்குண்டாபுரத்தில், பாரம்பரிய முறைகளை பின்பற்றி வீரமாத்தியம்மன் கோவில் திருவிழா கொண்டாடப்படுகிறது.
அதன்படி திருவிழாவுக்கு முன் தரிசு நிலத்தை சீர்படுத்தி, நீர் தெளிப்பார்கள். அவ்வாறு நீர் தெளிக்கப்படும் இடத்தில், குறிப்பிட்ட நாட்களில் செடிகள் முளைவிட்டதும், திருவிழா அறிவிக்கப்படும்.
நடப்பாண்டு திருவிழா கடந்த 28-ந்தேதி அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் பக்தர்களுக்கு சுத்தி செய்தல் மற்றும் பொதுப் பொங்கலுக்கு,நெல் குத்தும் நிகழ்ச்சி நடந்தது.நேற்று காலை 7 மணிக்கு கரும்பு எடுத்து வர செல்தல், இரவு7 மணிக்கு பொது பொங்கலும், தொடர்ந்து, வீரமாத்தியம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.
இரவு 11 மணிக்கு செடிகள் முளைவிட்ட இடத்தில் கரும்பு பந்தலிட்டு, பொங்கல் பானை வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X