என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள்கள் மீது லாரி மோதி விபத்து- 2 பேர் பலி
Byமாலை மலர்3 March 2022 6:04 AM GMT (Updated: 3 March 2022 6:04 AM GMT)
தூத்துக்குடியில் அடுத்தடுத்து மோட்டார் சைக்கிள்கள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி டூவிபுரம் 10-வது தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது22). இவர் அங்குள்ள தனியார் காற்றாலையில் பணியாற்றி வந்தார்.
நேற்றிரவு பணி முடிந்து தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தார். அவர் தூத்துக்குடி பீச்ரோடு பகுதியில் சென்ற போது எதிரே வந்த ஒரு லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
பின்னர் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்து கொண்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன் பட்டினத்தை சேர்ந்த அந்தோணி ஸ்டீபன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செல்வக்குமார் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற தென்பாகம் போலீசார் செல்வகுமாரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்தோணி ஸ்டீபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வகுமார் நள்ளிரவில் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.
தூத்துக்குடி டூவிபுரம் 10-வது தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது22). இவர் அங்குள்ள தனியார் காற்றாலையில் பணியாற்றி வந்தார்.
நேற்றிரவு பணி முடிந்து தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தார். அவர் தூத்துக்குடி பீச்ரோடு பகுதியில் சென்ற போது எதிரே வந்த ஒரு லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
பின்னர் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்து கொண்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன் பட்டினத்தை சேர்ந்த அந்தோணி ஸ்டீபன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செல்வக்குமார் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற தென்பாகம் போலீசார் செல்வகுமாரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்தோணி ஸ்டீபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வகுமார் நள்ளிரவில் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X