search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
    X
    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

    ஜெயக்குமார் மீது போடப்பட்ட 14 சட்டப்பிரிவுகள் என்னென்ன?

    இந்திய தண்டனை சட்டம் 147, 148, 294பி, 153, 355, 323, 324, 506(2) மற்றும் 4ஏஏ (1ஏ), 4ஏஏ(4) பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய சட்டப்பிரிவுகள் ஜெயக்குமார் மீது பாய்ந்துள்ளன.
    சென்னை:

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது தண்டையார்பேட்டை, ராயபுரம் போலீஸ் நிலையங்களில் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஜெயக்குமார் மீது கும்பலாக கூடுதல், அவதூறாக பேசுதல், தாக்குதலில் ஈடுபடுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 14 சட்டப்பிரிவுகள் வருமாறு:-

    இந்திய தண்டனை சட்டம் 147, 148, 294பி, 153, 355, 323, 324, 506(2) மற்றும் 4ஏஏ (1ஏ), 4ஏஏ(4) பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய சட்டப்பிரிவுகள் ஜெயக்குமார் மீது பாய்ந்துள்ளன.

    இதே போன்று ராயபுரம் போலீஸ் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டு அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, நோய் தொற்று பரப்புதல் ஆகிய சட்டப்பிரிவுகள் பாய்ந்துள்ளன. 188, 269, 270, 41 சென்னை போலீஸ் சட்டம் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×