search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கணபதிபாளையம் கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட காட்சி.
    X
    கணபதிபாளையம் கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட காட்சி.

    கணபதிபாளையம் கால்நடை மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் கட்ட கோரிக்கை

    வெளிப்புற சிகிச்சை பிரிவு அறை கட்டப்படவில்லை. இதனால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க காலதாமதம் ஆகிறது.
    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில், கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கடந்த 2002ம் ஆண்டு கட்டப்பட்ட மருந்தகத்திற்கு, சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. வெளிப்புற சிகிச்சை பிரிவு அறை கட்டப்படவில்லை. இதனால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க காலதாமதம் ஆகிறது.  

    கால்நடை வளர்ப்போர் இதுகுறித்து கூறியதாவது:

    கணபதிபாளையம் பகுதியில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உள்ளது. இந்த நிலையில் இங்குள்ள கால்நடை மருத்துவமனையில் போதுமான இட வசதிகள் இருந்தும், சுற்றுச்சுவர் மற்றும் வெளிப்புற சிகிச்சைப் பிரிவு கட்டப்படாததால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்படுகின்றது. எனவே தேவையான கட்டட வசதிகளை செய்தும் கூடுதலாக அரசு செய்து தர வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். 
    Next Story
    ×