என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    காதல் திருமணம் செய்த என்ஜினீயரிங் பட்டதாரி பெண் தற்கொலை

    கணவரின் குடிப்பழக்கத்தால் காதல் திருமணம் செய்த என்ஜினீயரிங் பட்டதாரி பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு கனி ராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்தவர் சுவிதா (வயது 24). என்ஜினீயரிங் பட்டதாரி. சுவிதா அதே பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவரை கடந்த 1½ வருடத்திற்கு முன்பு காதலித்து பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்.

    லோகநாதன் சித்தோட்டில் உள்ள டாஸ்மாக் குடோனில் லோடு மேனாக வேலை பார்த்து வந்தார். கணவன் மனைவி இருவரும் ஓங்காளியம்மன் கோவில் காந்திநகர், கனிராவு த்தர்குளம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். மகிழ்ச்சியாக சென்ற இவர்களின் வாழ்க்கை கணவரின் குடிப்பழக்கத்தால் திசை திரும்பியது.

    லோகநாதனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனை சுவிதா கண்டித்துள்ளார். கணவரிடம் இனிமேல் குடிக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுவிதா கணவர் குடிக்க கூடாது என்பதற்காக கோவிலில் சென்று சாமி கும்பிட்டு கயிறு வாங்கி வந்துள்ளார்.

    அந்த கயிறு தனது கணவரின் கையில் கட்டி இனிமேல் குடிக்க கூடாது என்று கூறியுள்ளார். லோகநாதனும் சில நாட்கள் குடிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வேலையை முடிந்து வீட்டுக்கு வந்த லோகநாதன் குடித்து விட்டு வந்துள்ளார். இதனால் சுவிதா மனமுடைந்து காணப்பட்டார். இரவில் லோகநாதன் சாப்பிட்டு விட்டு தூங்கி விட்டார்.

    இதனையடுத்து சுவிதா பக்கத்து அறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று காலை லோகநாதன் எழுந்து பார்த்தபோது மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

    இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுவிதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு வைத்தனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பட்டதாரி பெண் தற்கொலை குறித்து ஆர்.டி.ஓ. பிரேமலதா விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×