என் மலர்
உள்ளூர் செய்திகள்

தெப்பத்திருவிழா
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் தெப்ப திருவிழா
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா வருகிற 6&ந்தேதி தொடங்குகிறது
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் புகழ்பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தெப்ப உற்சவ திருவிழா வருகிற 6ந்தேதி மாலை 6 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
மறுநாள்(7ந்தேதி) காலை 7 மணிக்கு சுவாமி கல்யாண மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பின்னர் காலை 9.18 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. வருகிற 12ந்தேதி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் வைபவமும், 13-ந்தேதி மாலை சூர்ணாபிஷேகமும் தங்கத் தோளிக்கினியானில் சுவாமி திருவீதி புறப்பாடும், தெப்பக்குளத்தில் முகூர்த்தக்கால் நடுதல் விழாவும் நடைபெறுகிறது.
14ந்தேதி அரண்மனை மண்டகப்படியும், குதிரை வாகன புறப்பாடும், 15ந்தேதி வெண்ணெய்த்தாழி சேவையும், பகல் 10.50 மணிக்கு தெப்பம் முட்டுத்தள்ளுதல் வைபவமும், 16ந்தேதி தெப்பத்திருளான்று காலை 10.10 மணிக்கு பகல் தெப்பமும், இரவு 9 மணிக்கு தெப்பம் கண்டருளல் வைபவமும் நடைபெற உள்ளது. 17ந்தேதி தீர்த்தவாரி வைபவம் நடக்கிறது.
தெப்பத்திருவிழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராணி டி.எஸ்.கே. மதுராந்தக நாச்சியார், தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Next Story






