என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சிதம்பரம், நெய்வேலியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்26 Jan 2022 10:16 AM GMT (Updated: 26 Jan 2022 10:16 AM GMT)
சிதம்பரம், நெய்வேலியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் தாலுகா போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஓமக்குளத்தில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கு அருகில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிதம்பரம் ஓமக்குளம் ஜமால் நகரை சேர்ந்த முஸ்தபா(வயது 21), தனுஷ் (19) ஆகியோர் என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 60 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
நெய்வேலி 21-வது வட்டத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நெய்வேலி தெர்மல் போலீசார் 21-வது வட்டம் சிவகாமி அம்மன் கோவில் அருகில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தேனி மாவட்டம் ரத்னநகரை சேர்ந்த ஜெயராஜ் மகன் மாதவன்(வயது 20) என்பதும், தற்போது முத்தாண்டிக்குப்பத்தில் தங்கி இருந்து கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சிதம்பரம் தாலுகா போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஓமக்குளத்தில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கு அருகில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிதம்பரம் ஓமக்குளம் ஜமால் நகரை சேர்ந்த முஸ்தபா(வயது 21), தனுஷ் (19) ஆகியோர் என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 60 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
நெய்வேலி 21-வது வட்டத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நெய்வேலி தெர்மல் போலீசார் 21-வது வட்டம் சிவகாமி அம்மன் கோவில் அருகில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தேனி மாவட்டம் ரத்னநகரை சேர்ந்த ஜெயராஜ் மகன் மாதவன்(வயது 20) என்பதும், தற்போது முத்தாண்டிக்குப்பத்தில் தங்கி இருந்து கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X