search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    திருக்கோவிலூர் நகராட்சி பகுதியில் கொரோனா தொற்று தடுப்பு பணி தீவிரம்

    திருக்கோவிலூர், அரியூர், குன்னத்தூர் எடையூர், மற்றும் விளந்தை ஆகிய 5 சுகாதார மையங்களிலும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரிசோதனை நேற்று மேலும் தீவிரப்படுத்தப்பட்டு ஒரே நாளில் 300 பேருக்கு சோதனை மேற் கொள்ளப்பட்டது.

    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் அதிகமாக இருப்பது குறித்தும் வீட்டுக்கு ஒருவர் பாதிப்பு என்ற நிலையில் காணப்படுகிறது.

    இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் சுகாதாரத் துறையினர் அதிரடி நடவடிக்கையாக திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள வீடுகள் தோறும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்புக்குள்ளானவர்கள் இருக்கின்றார்களா? என் பதை நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.

    அதேசமயம் திருக்கோவிலூர், அரியூர், குன்னத்தூர் எடையூர், மற்றும் விளந்தை ஆகிய 5 சுகாதார மையங்களிலும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரிசோதனை நேற்று மேலும் தீவிரப்படுத்தப்பட்டு ஒரே நாளில் 300 பேருக்கு சோதனை மேற் கொள்ளப்பட்டது.

    இது தவிர கிராமங்களில் மருந்து தெளிக்கும் பணி மற்றும் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியும் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் நிர்வாகத்துடன் இணைந்து பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. மேற்கண்ட பணிகளை சுகாதாரத் துறையினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.

    Next Story
    ×