என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உடுமலை ரவுண்டானா பகுதியில் பஸ்கள் நிறுத்தப்படுவதால் பயணிகள் அவதி
Byமாலை மலர்22 Jan 2022 9:23 AM GMT (Updated: 22 Jan 2022 9:23 AM GMT)
பஸ் நிலையம் பகுதியில் தடுப்பு அமைக்கப்படாமல் ரோடுகளும் அகலப்படுத்தப்படாமல் உள்ளதால் ரவுண்டானா பகுதியில் பஸ்கள் நிறுத்தப்படுகிறது.
உடுமலை;
உடுமலை பஸ் நிறுத்தம் அருகே பழநிரோடு, பொள்ளாச்சி ரோடு, ராஜேந்திரா ரோடு, பைபாஸ் ரோடு மற்றும் அனுஷம் ரோடு, ஐஸ்வர்யா நகர் ரோடுகள் சந்திக்கும் பகுதியில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையால் ரூ.1.5 கோடி செலவில் சிக்னல் இல்லாத ரவுண்டானா அமைக்கப்பட்டது.
இத்திட்டத்தில் பஸ் நிலையம் பகுதியில் தடுப்பு அமைக்கப்படாமல் ரோடுகளும் அகலப்படுத்தப்படாமல் உள்ளதால் ரவுண்டானா பகுதியில் பஸ்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் சிக்கல் ஏற்படுகிறது.
மேலும் பொள்ளாச்சி பஸ்கள், கிழக்கு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியில் பைபாஸ் ரோட்டில் வரும் வாகனங்கள் தெரியும் வகையில், பஸ் நிறுத்தம் நிழற்கூரை மற்றும் சுற்றுச்சுவர் அகற்றப்படாததால், பைபாஸ் ரோட்டில் கிழக்கு நோக்கி வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படுகிறது.
இப்பகுதியில் கடைகள், தள்ளுவண்டி கடைகளும் ஆக்கிரமித்துக்கொள்வதால் ரவுண்டானா திட்டம் பயன்படாமல், மேலும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.
எனவே போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து போலீசார் முறையாக ஆய்வு செய்து ரவுண்டானாவை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X