search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி அனந்தன்
    X
    குமரி அனந்தன்

    முனைவர் குமரி அனந்தனுக்கு ‘காமராஜர் விருது’- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    விருது பெறுபவர்களுக்கு விருதுத் தொகையாக ரூபாய் 1 லட்சம் பணமும், 1 சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் அய்யன் திருவள்ளுவர் விருதும், பெருந்தலைவர் காமராஜர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில் இந்த ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருது மு. மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கும்,  2021-ம் ஆண்டுக்கான பெருந்தலைவர் காமராஜர் விருது முனைவர் குமரி அனந்தனுக்கும் வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    விருது பெறும் விருதாளர்களர்களுக்கு விருதுத் தொகையாக ரூபாய் 1 லட்சம் பணமும், 1 சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  விருது பெறுபவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×