என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
சேலம் மாவட்டத்தில் 499 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் மேலும் 499 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 426 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மேலும் 499 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஒரே நாளில் 116 பேர் கொரோனாவில் மீண்டு குணம் அடைந்து வீடு திரும்பினர். 1917 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 4 ஆயிரத்து 805 ஆக உயர்ந்துள்ளது. குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 1156 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 1732 ஆகவும் உள்ளது.
Next Story