என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேலத்தில் மின் கம்பம் மீது லாரி மோதியது
Byமாலை மலர்13 Jan 2022 11:00 AM GMT (Updated: 13 Jan 2022 11:00 AM GMT)
சேலத்தில் மின்கம்பத்தின் மீது லாரி மோதியது. இதில் மின்கம்பம் சேதமானது.
சேலம்:
சேலம் செவ்வாய்ப்பேட்டை நரசிம்மன் செட்டி ரோடு பகுதியில் நேற்று முன்தினம் ஒரு லாரி லோடு ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது அந்த பகுதியில் உள்ள மின்கம்பம் மீது லாரி எதிர்பாராத விதமாக மோதியது. இதில் மின் கம்பம் பலத்த சேதமடைந்தது.
சேதமடைந்த மின் கம்பிகள், கம்பம், ஒயர்கள், பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம். இது குறித்து அரிசிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மின் வாரிய என்ஜினீயர் சதிஷ்குமார் அளித்த புகாரின் பேரில் அரசு பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார் சம்பந்தப்பட்ட லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டு சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. லாரி எங்கிருந்து வந்தது?, அதன் உரிமையாளர் யார்? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X