என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
களக்காட்டில் பாம்பு கடித்து பெண் பலி
Byமாலை மலர்13 Jan 2022 9:10 AM GMT (Updated: 13 Jan 2022 9:10 AM GMT)
களக்காடு அருகே உள்ள படலையர்குளத்தில் வயலுக்கு சென்ற இடத்தில் பாம்பு கடித்து பெண் பலியானார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள படலையார்குளம், கீழத் தெருவை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி அரசம்மாள் (50).
கடந்த 9-ந்தேதி களக்காடு மின்சார நிலையம் அருகே உள்ள வயல் பகுதியில் தனது வீட்டில் வளர்த்து வரும் ஆடுகளுக்கு செடி- கொடிகளை பறித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவரை பாம்பு கடித்தது. இதனைதொடர்ந்து உறவினர்கள் அவரை களக்காடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதன் பின்னர் அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அரசம்மாள் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இதுபற்றி அவரது மகன் சுடலைக்கண்ணு (27) களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X