என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கடலூர் கலெக்டர் ஆபீசில் பயிலரங்கம்- திருக்குறள் ஒப்புவித்த மாணவிகளுக்கு சான்றிதழ்
Byமாலை மலர்11 Jan 2022 11:38 AM GMT (Updated: 11 Jan 2022 11:38 AM GMT)
ஆட்சிமொழிக் கருத்தரங்கில் சவகர் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சந்திரசேகரன், பெரியார் அரசு கலைக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் ராசா, கடலூர் அரசு மேனிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர். வெற்றிச் செல்வி ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஜனவரி 7 மற்றும் 8ஆம் தேதி 2 நாட்கள் ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் நடைபெற்றன. இப்பயிலரங்கில் ஆட்சி மொழி வரலாறு, சட்டம், அரசாணைகள், மொழி பெயர்ப்பு கலைச்சொல்லாக்கம், தமிழில் குறிப்புகள், வரைவுகள் செயல்முறை ஆணைகள் அணியம் செய்தல், மொழி பயிற்சி, கணினிப் பயிற்சி, ஆட்சிமொழி ஆய்வும், குறை களைவு நடவடிக்கைகளும் என்ற தலைப்புகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. அந்தப் பயிற்சி வகுப்புகளில் கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அரசுத் துறைகளைச் சார்ந்த பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
ஆட்சிமொழிக் கருத்தரங்கில் சவகர் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சந்திரசேகரன், பெரியார் அரசு கலைக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் ராசா, கடலூர் அரசு மேனிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர். வெற்றிச் செல்வி ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.
1330 திருக்குறளையும் முற்றோதல் செய்த 5 மாணவிகளுக்கு 10,000 ஆயிரம் வீதம் காசோலைகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பெற்றனர். மாவட்ட நிலையில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய அரசு இசைப்பள்ளிக்குக் கேடயம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழில் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதிய அரசு பணியாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பெற்றனர். இந்த 2 நாள் நிகழ்ச்சிகளை தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அன்பரசி வெகுசிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்.
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஜனவரி 7 மற்றும் 8ஆம் தேதி 2 நாட்கள் ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் நடைபெற்றன. இப்பயிலரங்கில் ஆட்சி மொழி வரலாறு, சட்டம், அரசாணைகள், மொழி பெயர்ப்பு கலைச்சொல்லாக்கம், தமிழில் குறிப்புகள், வரைவுகள் செயல்முறை ஆணைகள் அணியம் செய்தல், மொழி பயிற்சி, கணினிப் பயிற்சி, ஆட்சிமொழி ஆய்வும், குறை களைவு நடவடிக்கைகளும் என்ற தலைப்புகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. அந்தப் பயிற்சி வகுப்புகளில் கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அரசுத் துறைகளைச் சார்ந்த பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
ஆட்சிமொழிக் கருத்தரங்கில் சவகர் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சந்திரசேகரன், பெரியார் அரசு கலைக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் ராசா, கடலூர் அரசு மேனிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர். வெற்றிச் செல்வி ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.
1330 திருக்குறளையும் முற்றோதல் செய்த 5 மாணவிகளுக்கு 10,000 ஆயிரம் வீதம் காசோலைகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பெற்றனர். மாவட்ட நிலையில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய அரசு இசைப்பள்ளிக்குக் கேடயம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழில் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதிய அரசு பணியாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பெற்றனர். இந்த 2 நாள் நிகழ்ச்சிகளை தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அன்பரசி வெகுசிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X