search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறுவடை எந்திரம்
    X
    அறுவடை எந்திரம்

    சிவகங்கை மாவட்டத்தில் நெல் அறுவடை எந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம்

    சிவகங்கை மாவட்டத்தில் நெல் அறுவடை எந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
     
    சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்திற்கு அறுவடை எந்திரங்களின் தேவை அதிகமாக இருப்பதால் மற்ற மாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் நெல் அறுவடை எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அறுவடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

     தனியாருக்கு சொந்தமான நெல் அறுவடை எந்திரங்கள் அதிக வாடகையில் இயக்குவதாக விவசாயிகளிடம் இருந்து கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சக்கர வகை நெல் அறுவடை எந்திரங்களை மணிக்கு ரூ.1600 என்ற வாடகையும், செயின் வகை அறுவடை எந்திரங்களை மணிக்கு ரூ.2,200 என்ற வாடகையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகளிடம் இருந்து கூடுதலாக வாடகை வசூல் செய்யப் படுவதாக புகார் பெறப்பட்டால் விவசாயிகள் வருவாய் கோட்ட அலுவலர்கள், வட்டாட்சியர்கள், வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம். 

    வேளாண்மைப் பொறியியல் துறையின் சக்கர வகை நெல் அறுவடை எந்திரங்களை மணிக்கு ரூ.1010- என்ற வாடகையிலும், செயின் வகை அறுவடை எந்திரங்களை மணிக்கு ரூ.1,630/- என்ற வாடகையிலும் விவசாயிகள் வேளாண்மைப் பொறியியல் துறையினை அணுகி பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×