search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தென்காசி அருகே மது விற்றவர் கைது

    தென்காசி அருகே உள்ள இலஞ்சி பகுதியில் குற்றாலம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்றுக்கொண்டிருந்த ஒருவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 48 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    தென்காசி:

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள், போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட் பட்ட இலஞ்சி பகுதி அருகில் சப்&இன்ஸ்பெக்டர் சண்முகவேல் ரோந்து பணியில் இருந்தார்.

    அப்போது அங்கு விற்பனைக்காக மதுபாட்டில் களை வைத்திருந்த வல்லம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 26) மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.

    மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 48 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×