search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    மொடக்குறிச்சி அருகே வடமாநில பெண் தற்கொலை- போலீசார் விசாரணை

    மொடக்குறிச்சி அருகே வடமாநில பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஒடிசா மாநிலம் ராச்சிபூர் மாவட்டம் தானியாபார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதிதாலேய் (வயது 26). இவரது தங்கை புஷ்பாதாலேய் (24). அக்கா தங்கை இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் தொட்டி பாளையம் பகுதியில் உள்ள ஒரு மில்லில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் ஸ்ரீமதிதாலேய் கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்துள்ளார். இதுகுறித்து அவரது தங்கை அக்காவிடம் கேட்டுள்ளார். அதற்கு ஸ்ரீமதிதாலேய் தான் ஒருவரை காதலித்ததாகவும் அவர் தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.

    இதனையடுத்து அக்காவை புஷ்பாதாலேய் சமாதானப்படுத்தியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஸ்ரீமதிதாலேய் வேலைக்கு விடுப்பு எடுத்து அறையில் தங்கி இருந்தார்.

    பின்னர் அவர் அவரது தங்கை மற்றும் அறையில் தங்கி இருந்தவர்கள் இரவில் தூங்க சென்று விட்டனர். அதிகாலையில் புஷ்பாதாலேய் எழுந்து பார்த்தபோது அக்கா ஸ்ரீமதிதாலேய் தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஸ்ரீமதிதாலேய் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×