என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ரேஷன் கடைகளுக்கு வந்த பொங்கல் பரிசு தொகுப்பு
Byமாலை மலர்3 Jan 2022 9:44 AM GMT (Updated: 3 Jan 2022 9:44 AM GMT)
பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ரேஷன் கடைகளுக்கு கரும்பு உள்பட 21 வகையான பொங்கல் தொகுப்பு கொண்டு வரப்பட்டு தயாராக வைக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு:
பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ரேஷன் கடைகளுக்கு கரும்பு உள்பட 21 வகையான பொங்கல் தொகுப்பு கொண்டு வரப்பட்டு தயாராக வைக்கப்பட்டு உள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், ஒரு முழு கரும்பு உள்பட 21 பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை சென்னையில் நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 771 அரிசி அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் ரேஷன் கார்டுகள் 1381 என மொத்தம் 7 லட்சத்து 41 ஆயிரத்து 153 ரேஷன் கார்டுதாரர்களுக்கு 21 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
இதற்காக கடந்த சில நாட்களாக ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வினியோகித்து வருகின்றனர். அந்தந்த ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு கட்டுகளும் வந்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் கூடாத வகையில் டோக்கன் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் பொங்கல் பரிசு தொகுப்புகள் விநியோகிக்கப்பட உள்ளன.
வரும் 31-ந் தேதி வரை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புகளை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X