search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
    X
    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

    புத்தாண்டில் புதிய இலக்கு, குறிக்கோளை நோக்கி பயணிக்க வேண்டும்- கவர்னர் தமிழிசை வாழ்த்து

    கொரோனா தொற்று இன்னும் முழுமையாக விலகாத நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விழாக்களையும், பண்டிகைகளையும் மக்கள் கொண்டாடுமாறு புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 2022-ம் ஆண்டில் புதிய இலக்குகளையும், குறிக்கோள்களையும் நோக்கி நாம் பயணிக்க வேண்டும். இந்தியாவின் ஆளுமை, ஒன்றுபட்ட உணர்வு, உலகிற்கு தலைமை ஏற்கும் தகுதி ஆகியவற்றை உலகிற்கு பறைசாற்றும் ஆண்டாக 2021-ம் ஆண்டு அமைந்தது.

    இந்திய நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் வேளையில் நாட்டின் ஒற்றுமைக்காகவும், ஒன்றுபட்ட வளர்ச்சிக்காவும் நம்மை மீண்டும் அர்ப்பணித்து கொள்ள வேண்டும். கொரோனா தொற்று இன்னும் முழுமையாக விலகாத நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விழாக்களையும், பண்டிகைகளையும் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறோம். புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×