search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வண்டலூர் பூங்கா
    X
    வண்டலூர் பூங்கா

    புத்தாண்டு முன்ஏற்பாடு: வண்டலூர் பூங்காவில் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுகள்

    புத்தாண்டு நாளில் பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது, பரிசோதனையில் உடல் வெப்பநிலை மாறுபாடுகள் உள்ளவர்கள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.
    செங்கல்பட்டு:

    புத்தாண்டையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவில் அதிக அளவில் பார்வையாளர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக வண்டலூர் பூங்கா இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    புத்தாண்டில், உயிரியல் பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்கள் தங்கள் சொந்த பாதுகாப்பு மற்றும் விலங்குகளின் பாதுகாப்பிற்காக கோவிட் நடைமுறைகளை பின்பற்று மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது, பரிசோதனையில் உடல் வெப்பநிலை மாறுபாடுகள் உள்ளவர்கள் பூங்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பூங்காவினுள் பல்வேறு இடங்களில் கை கழுவும் வசதிகள் மற்றும் தானியங்கி கை சுத்திகரிப்பான்கள் வைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக 2 மீட்டர் தூர இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் இல்லாதவர்கள் நுழைவுசீட்டு வழங்கும் இடத்தில் முகக்கவசங்களை வாங்கி கொள்ளலாம். முகக்கவசம் அணியாதவர்கள் பூங்காவினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    வண்டலூர் பூங்கா

    பூங்காவிற்குள் நுழையும் பார்வையாளர்கள் கிருமி நீக்கம் செய்யும் கால் குளியல் (பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல்) வழியாகவும், வாகனங்கள் நுழையும் போது டயர்கள் கிருமிநாசினியில் நனைந்த பிறகே செல்ல வேண்டும். பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, கோவிட் தொடர்பான வழிமுறைகள் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவிக்கப்படுகின்றது.

    பாவையாளர்கள் கொரோனா சிறப்பு குழு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்கள் அடங்கிய பலகை பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களின் நடமாட்டம் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவ்வப்போது கொரொனா நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு வரப்படுகிறது. பார்வையாளர்களால் கொரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதை மேற்பார்வையிடவும் மற்றும் கண்காணிக்கவும் பூங்கா துணை இயக்குனர் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×