
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கட்சி நிர்வாகிகள் தொண்டர்களுடன் அவர் திடீர் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.
எந்த நேரமும் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என்ற நிலையில் அ.தி.மு.க. சார்பாக தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்தும், கட்சி வளர்ச்சிப்பணிகள் தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.