என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தூசி அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி வாலிபர் பலி
Byமாலை மலர்22 Dec 2021 10:10 AM GMT (Updated: 22 Dec 2021 10:10 AM GMT)
தூசி அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
தூசி:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா புன்னை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் அலெக்ஸ் (வயது 25). செய்யாறு சிப்காட் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி விஜயலட்சுமி (23) என்ற மனைவியும், ஒரு வயதில் ஷர்மிதா என்ற குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு ஷிப்ட் வேலை முடித்துவிட்டு அலெக்ஸ் மோட்டார்சைக்கிளில் இரவு 11.30 மணிக்கு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். தூசி அருகே புதுப்பாளையம் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அலெக்ஸ் தலையில் படுகாயமடைந்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா புன்னை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் அலெக்ஸ் (வயது 25). செய்யாறு சிப்காட் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி விஜயலட்சுமி (23) என்ற மனைவியும், ஒரு வயதில் ஷர்மிதா என்ற குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு ஷிப்ட் வேலை முடித்துவிட்டு அலெக்ஸ் மோட்டார்சைக்கிளில் இரவு 11.30 மணிக்கு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். தூசி அருகே புதுப்பாளையம் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அலெக்ஸ் தலையில் படுகாயமடைந்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X