என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொரோனா தடுப்பூசி
திருவண்ணாமலை மாவட்டத்தில் 71 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தில் 48 ஆயிரத்து 137 பேருக்கும், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 23 ஆயிரத்து 6 பேருக்கும் என மாவட்டத்தில் 71 ஆயிரத்து 143 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
திருவண்ணாமலை:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வாரத்திற்கு ஒரு நாள் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றது. அதன்படி நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாம்களில் பொதுமக்களுக்கு முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தில் 48 ஆயிரத்து 137 பேருக்கும், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 23 ஆயிரத்து 6 பேருக்கும் என மாவட்டத்தில் 71 ஆயிரத்து 143 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Next Story






